சராசரியை விட எகிறும் புயல்களின் எண்ணிக்கை.! மத்திய அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்.!
cyclone was increased in india
இந்தியாவில் சராசரி அளவைக் காட்டிலும் எப்போதும் இல்லாத அளவு 2019ஆம் ஆண்டில் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய புவியியல் அமைச்சகம் இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடு முழுவதும் 5 அதிதீவிர புயல்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளது. இது எப்போதும் நடைபெறும் சராசரி அளவைக் காட்டிலும் அதிகமானதாகும்.
1891 முதல் 2017 வரையில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆண்டுக்கு சராசரியாக அரபிக்கடலில் ஒரு புயலும் மற்றும் வங்காள விரிகுடாவில் 4 புயல்களும் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் அமைச்சகம் கூறியுள்ளது.
அரபிக் கடலில் வருடத்திற்கு சராசரியாக ஒரு புயல் ஏற்படும் எனும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 5 புயல்கள் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இவை தீவிரமான புயல்களாக இருந்ததாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
அரசு அளித்த தகவலின்படி அரபிக் கடலில் 2017ஆம் ஆண்டு அதிதீவிரமான அளவில் ஒரு புயலும், 2018ஆம் ஆண்டு 3 புயல்களும் மற்றும் 2019ஆம் ஆண்டில் 5 புயல்களும் ஏற்பட்டு இருக்கின்றது. அதுபோல வங்காள விரிகுடாவில் 2017ஆம் ஆண்டில் அதிதீவிரமாக 2 புயல்களும், 2018ஆம் ஆண்டில் 4 புயல்களும் மற்றும் 2019ஆம் ஆண்டில் 3 புயல்களும் ஏற்பட்டு இருக்கின்றன.
English Summary
cyclone was increased in india