40 வயது பெண்மணி கொரோனாவிற்கு பலி.. மகாராஷ்டிராவின் பலி எண்ணிக்கை உயர்வு.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரினை மையமாக வைத்து பரவ துவங்கிய கரோனா வைரஸானது உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். 

உலகம் முழுவதும் தற்போது வரை கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 663,740 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலியானவர்களின் எண்ணிக்கையும் 30,879 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து 142,183 மீண்டுள்ளனர். 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 979 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் 25 பேர் பலியான நிலையில், 86 பேர் சிகிச்சை முடித்து இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது மும்பையை சார்ந்த 40 வயது பெண்மணி கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள 7 ஆவது இறப்பு ஆகும். இவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனையும் இருந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona virus patient died in mumbai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->