அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை ஆலோசனை.!
corona vaccine recusal
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை கடந்த ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இரண்டாவது கட்டமாக ஒத்திகை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தடுப்பூசி ஒத்திகை முதல் கட்டமாக சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெற்றுள்ளது. இதே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 8ஆம் தேதி ஒத்திகை நடக்கவுள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.