இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மத்திய அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் பல நாடுகள் மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சில முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பூதி தயாரிக்கும்  ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிலும் விரைவில் கொரோனா தடுப்பூசி, மக்களுக்கு செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகளை இந்தியா மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. 

இந்நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தடுப்பூசிகள் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் ஆகியவற்றை நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும், இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona vaccine in india


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->