எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களை விடாமல் துரத்தும் கொரோனா.. தற்போது சமூகநலத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி.!!
corona positive in puducherry minister
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் களப்பணியாற்றி வரும் அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர், எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்றுமாலை அனுமதிக்கப்பட்டனர்.
நேற்றுமுன்தினம் அமைச்சர் கந்தசாமியின் தாயாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் மற்றும் அவரது மகன்கள், மனைவி உட்பட 9 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
corona positive in puducherry minister