கொரோனா வார்டில் இருந்து ஓட்டம் பிடித்த கொலை குற்றவாளி.! நண்பருக்கு கால் செய்து கேட்ட கேள்வியால் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


கொலை குற்றவாளி ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மது அருந்துவதற்காக தப்பியோடிய சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தன்னுடைய நண்பனை கத்தியால் குத்திய குற்றத்திற்காக அந்த நபர் ஜூன் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியது. அவரை உடனடியாக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். 

அங்கே அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருக்கையில், திடீரென அந்த நபர் கையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க மற்றொரு வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்து செவிலியர் களையும், பாதுகாப்பு காவலர்களையும் தள்ளிவிட்டு அந்த கொலை குற்றவாளி தப்பி ஓடியுள்ளார். 

மருத்துவமனையின் சுவரில் ஏறி குதித்து அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றார். அவர் தப்பி ஓடியது மருத்துவமனை அதிகாரிகளுக்கு பீதியை கிளப்ப, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 

இந்நிலையில் தப்பிச் சென்ற அந்த நபர் தனது நண்பரை தொடர்பு கொண்டு தனக்கு மது வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது அவருடைய நண்பருக்கு தெரியும் என்பதால், அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் அவரை கண்டுபிடித்து சமாதானப்படுத்தி ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர் போலீஸார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona patient escaped from hospital for drinking liquor 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->