கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா.. ! மத்திய சுகாதார துறை வெளியிட்ட தகவல்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தற்போது தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மொத்தம் 773 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள தகவலையும், இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது 5194 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை 401 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல 149 பேர் இறந்துள்ளனர். தற்பொழுது சிகிச்சையில் 4 ஆயிரத்து 643 பேர் இருந்து வருகின்றனர் என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  

ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனா பரவலின்  வேகமானது குறைவாக இருந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 773 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே வேகத்தில் தொற்று பரவும் எனில் இந்தியா மிகப்பெரிய சிக்கலை சந்திக்க வேண்டிவரும் என்ற அச்சம் தற்போது நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona india update last 24 hours on april 8


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->