மாநில அரசுகள் கோரிக்கை....! ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக மத்திய அரசு திட்டம்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு மற்றும் மத்திய அரசு தேவையான பல நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் அமலாகியுள்ள ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் தளர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நோயின் தீவிரம் காரணமாக இதனை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இதே விஷயத்தை மாநில அரசுகளும் மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரியவருகிறது. இதன் அடிப்படையில், இது குறித்து மத்திய அரசு யோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.. மாநில அரசுகளின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 

பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும், இது குறித்து யோசனை செய்து அறிவிப்புகள் வெளியிடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona curfew extend till process on central govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->