பிரதமர் மோடியை கொல்ல சதி! உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!  - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் மோடியை கொலை செய்ய, பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து பிரதமருக்கான பாதுகாப்பை உறுதிசெய்திட எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

வருகின்ற டிசம்பர்  22 ஆம் தேதி பிரதமர் மோடி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் டெல்லியில் உள்ள சட்டவிரோத குடியிருப்புப் பகுதிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மோடி பேச இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற தகவலை, எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும், டெல்லி போலீசாருக்கும் உளவுத்துறை எச்சரிக்கை தகவலை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியை, பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷே முகம்மது தீவிரவாதிகள் குறிவைத்து தாக்குவதற்காக தயார் நிலையில் இருக்கின்றனர் என உளவுத்துறை தெரிவித்துள்ளனர்.

உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடிக்கு போதிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Conspiracy to kill PM Modi Shocking information released by intelligence


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->