கோமாவில் இருந்த பெண்ணிற்கு பிரசவம்.! எதிர்பாராத நேரத்தில் அரங்கேறிய சம்பவம்.!
coma woment deliver a baby
கோட்டயம் மாவட்டத்தில், வழூவூரைச் சேர்ந்த அனூப் என்பவருக்கு பெத்தனா என்ற மனைவியும், ஆண் குழந்தை ஒன்றும் இருக்கின்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் கர்ப்பம் தரித்து இருக்கின்றார். அந்த நேரத்தில், பெத்தனா எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்துள்ளார். இதன் காரணமாக பெத்தனா கோமாவுக்கு சென்றுள்ளார்.
இருப்பினும் குழந்திங்க்கு எதுவும் ஆகவில்லை. மருத்துவர்கள் பெத்தனாவை காப்பாற்றவே முடியாது என கைவிட்டுள்ளனர். இருப்பினும் நம்பிக்கையுடன் அவருடைய கணவர் வீட்டிற்கு அழைத்து வந்து இருக்கின்றார். அந்த நாளில் இருந்து இன்றுவரை பெத்தனாவை அவருடைய கணவர் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகின்றார்.
இந்த நிலையில், பெத்தனா கர்ப்பம் தரித்து பத்தாவது மாதம் ஆகின்றது என்பதன் காரணமாக அவருடைய பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி மீண்டும் பெத்தனாவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு எல்வின் என்று பெயர் வைத்து இருக்கின்றனர்.
இதன் பின்னர் இத்தனை நாட்கள் கோமாவில் இருந்த பெத்தனாவின் முகத்தில் தற்போது பல்வேறு உணர்ச்சிகள் தென்படத் துவங்கி இருக்கின்றன. குழந்தையின் அழுகை, சிரிப்புக்கு ஏற்றவாறு அவரும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வருகிறாராம். படுத்த, படுக்கையாக இருந்த பெத்தனா தற்போது எழுந்து உட்காரும் நிலைக்கு வந்துள்ளார்.
அவருடைய கணவரும், குடும்பத்தினரும். மிகவிரைவில் பெத்தனா முழுமையாக குணமடைந்து விடுவார் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அனூப், "பெத்தனாவுக்குப் பழைய நினைவு திரும்பியிருக்கின்றது. எந்த ஒருக் கணவனுக்கும் தன் மனைவி அழுதால் மகிழ்ச்சியாக இருக்காது. இருப்பினும், என் மனைவி அழுதபோது நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்." என தெரிவித்துள்ளார்.
English Summary
coma woment deliver a baby