சீனாவின் அட்டூழியம்.. பார்த்தாலே பீதியை ஏற்படுத்தும் ஆயுதத்தை வைத்து தாக்கிய சீன இராணுவம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சுமார் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன நாட்டின் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் இல்லாத நிலையில், இந்த தாக்குதலை திட்டமிட்டு சீனா நடத்தியுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவிடம் குற்றம் சுமத்தியிருந்தார். 

மேலும், இந்த தாக்குதலின்போது துப்பாக்கிகளையும் பயன்படுத்தப்படாத நிலையில், கைகலப்பில் கற்களை கொண்டு தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் துப்பாக்கியை பயன்படுத்த கூடாது என்ற விதிமுறையும் வரையறுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சீன ராணுவத்தினர் முன்கூட்டியே இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களை தங்களுடன் எடுத்து வந்த நிலையில், இதை வைத்து தாக்கியதில் தான் இந்திய தரப்பில் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலும், இதனைப்போன்ற கம்பியை கடந்த மே 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சீன ராணுவம் பயன்படுத்தியதும் அம்பலமாகியுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இராணுவ வீரர்கள் தரப்பில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன ராணுவத்தை பொறுத்தவரையில் அந்நாட்டின் ராணுவ கமிஷன் தலைவர் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஒப்புதலுக்கு பின்னர்தான் சீன ராணுவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல் வெளியாகும். இந்த நிலையில், சீன ராணுவத்தின் மேற்கு பிரிவு செய்தி தொடர்பாளர் கூறுகையில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China troop attacks Indian army by nail wooden strip


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->