#நெல்லை || சாலையில் சென்ற ஆட்டோ மீது ராட்சத மரம் சாய்ந்து விபத்து., இருவர் பலி.!
cheranmahadevi road tree accident
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டும் போது, அருகிலிருந்த மரம் ஆட்டோ மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த இருவர் உடல்நசுங்கி பலியாகினர்.
திருச்செந்தூரிலிருந்து அம்பாசமுத்திரம் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரத்தில் இருந்த மரங்களை ஜேசிபி உதவியுடன் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று சேரன்மகாதேவி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரம் இருந்த மரத்தை அகற்றும்போது, முன்னெச்சரிக்கை செய்யாமல் அகற்றியதால், அந்த வழியாக வந்த ஆட்டோ மீது ராட்சத மரம் சாய்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ரஹமத் என்ற பெண்மணியும், காதர் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலும் மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
cheranmahadevi road tree accident