ஓபிஎஸ் மற்றும் ஸ்டாலினுக்கு ஒரே நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!  - Seithipunal
Seithipunal


தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மத்திய அரசு வழங்கி வந்த 'இசட் பிரிவு' எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

நாட்டில் உள்ள பிரபலமான முக்கிய தலைவர்களுக்கு அச்சுறுத்தலின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம், பல்வேறு வகையான கிரேடுகளில் பாதுகாப்பு வழங்குகிறது. இந்தநிலையில், கடந்த 6-ம் தேதி தமிழக காவல் துறை அதிகாரிகளுடன், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்படுகிறது. 

இனிமேல் அவருக்கு தமிழக மாநில காவல் துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தர்மயுத்தம் நேரத்தில் ஓபிஎஸ்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் வழங்கப்பட்டு  வந்த 'இசட் பிரிவு' பாதுகாப்பும் திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt withdraw CRPF force to OPS and MK Stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->