போலியான வேலைவாய்ப்பு மூலம் அரசு பெயரில் ஏமாற்றம் - அதிகாரிகள் எச்சரிக்கை.!
Central Govt Warn about Fraud News 15 April 2021
மத்திய அரசு சார்பாக வேலை வழங்குவதாக கூறும் தகவல் அடங்கியது தொடர்பான நிறுவனம் ஒன்றின் அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள நிறுவனம் மத்திய அரசில் அங்கம் வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள அறிக்கையில், பயோ கெமிக் எட்யூகேசன் கிராண்ட் கமிஷன் என்ற பெயரை கொண்ட நிறுவனம், மத்திய அரசு வேலை வழங்குவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிக்கை வைரலாகிய நிலையில், மத்திய அரசின் கீழ் இயங்குவதாக தெரிவித்துள்ள நிறுவனம் குறித்த தகவல் பொய்யானது என்று மத்திய பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வேலை வாய்ப்பு குறித்து வெளியாகியுள்ள விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், இது தொடர்பான விளம்பரத்தை வெளியிட்டுள்ள நிறுவனத்தின் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
மேலும், போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு குழு தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Central Govt Warn about Fraud News 15 April 2021