மத்திய அரசின் இலவச திட்டத்திற்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு.!
central govt plan about appreciate inter national company
மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஏழை குடும்பங்களுக்கு இலவச இலவச கேஸ் இணைப்பு திட்டம் வழங்கியது. முந்தைய பாரதிய ஜனதா அரசு இதை கொண்டுவந்தது பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற இந்த திட்டத்தை கடந்த 2011 மே 1 ம் தேதி உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
2020-ல் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 8 கோடி இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதில் 7.4 கோடி இணைப்புகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கடந்த 2014 பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்று நாட்டின் கேஸ் இணைப்புகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது அந்த வகையில் 26 கோடிக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டில் 90 சதவீத மக்கள் இணைப்பு பெற்றிருக்கும் நிலையில் 2020 21 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களும் கேஸ் இணைப்பு பெறுவது மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது.
மத்திய அரசின் இந்த இலவச கியாஸ் இணைப்பு திட்டத்தை சர்வதேச எரிசக்தி நிறுவனம் வெகுவாக பாராட்டி உள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் சோலார் போன்ற புதுப்பிக்கவல்ல எரிசக்தி மூலம் 175 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது ஆனால் இதே வேகத்தில் சென்றால் இலக்கை அதிகரித்து திருத்தப்பட வேண்டும். இவ்வாறு பதில் கூறினார் மத்திய அரசின் இலவச கேஸ் வழங்கும் திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டு பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது
English Summary
central govt plan about appreciate inter national company