பிப்-28 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு.. திரையரங்கில் 100% அனுமதி - மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


ஊரடங்கை மத்திய அரசு வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, படிப்படியாக தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜனவரி மாதம் 31 ஆம் தேதியுடன் இம்மாதத்திற்கான ஊரடங்கு விதிமுறைகள் நிறைவு பெறுகிறது. 

இதனையடுத்து பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா விதிமுறைகள் ஏற்கனவே உள்ளவை அப்படியே தொடரும் என்றும், தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள துறைகளுக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊரடங்கு தளர்வுகளின் படி, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திரையரங்கில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Announce February Month Corona Relaxation 27 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->