#Breaking: கொரோனாவிற்கு விடைகொடுக்க நேரம் வந்துவிட்டது.. ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி..!
Central Govt Announce Corona Vaccine Injection from 16 Jan 2021
ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகத்தை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்தது. கொரோனாவை கட்டுக்குள் வைக்க தடுப்பூசி கண்டறியும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், உலக நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும். 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை செலுத்துவதில் 50 வயதிற்கு மேலே உள்ள நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Central Govt Announce Corona Vaccine Injection from 16 Jan 2021