ஓட்டுனருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி.. தாறுமாறாக ஓடிய பேருந்து 2 பேர் பலி.!
Bus driver heart attack in madhya pradesh 2 people death
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் நேற்று திடீரென பேருந்து ஓட்டுனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில் பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில், மாநகரப் பேருந்து காவல் நிலைய பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையை விட்டு விலகி அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகனங்களும் இழுத்து செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களையும், பேருந்து இருக்கையில் மயக்கம் அடைந்த ஓட்டுனரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில், ஓட்டுநர் மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
English Summary
Bus driver heart attack in madhya pradesh 2 people death