அசுர வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து..! அரங்கேறிய கோர சம்பவம்..! துடித்து போன பயணிகள்..!  - Seithipunal
Seithipunal


சாம் மாநிலத்தில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் அதிவேகத்தில் பேருந்தை இயக்கியதால், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அசாமில் துபிரி பகுதியில் இருந்து இன்று காலை கவுகாத்தியை நோக்கி அரசு பேருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த நிலையில் பேருந்து கோல்பூரா மாவட்டத்தில் பகுதியை வேகமாக கடந்து சென்றுகொண்டிருந்தது.

அப்போது பேருந்து அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த மின்கம்பம் ஒன்றில் அதிவேகத்தில் பயங்கரமாக மோதியது. இதில் அந்தப் பேருந்து தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்காரணமாக, பேருந்தில் இருந்தவர்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி காயம் அடைந்த மற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, எவ்வாறு இந்த விபத்து ஏற்பட்டது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus accident in assam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->