பஞ்சாப் எல்லையில் பறந்த ட்ரோன்.! சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் எல்லை பகுதியில் நேற்று முன்தின இரவு 7:20 மணியளவில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று காலை தேடுதல் வேட்டை நடத்தியபோது, ​​இந்திய எல்லையான பரோபாலுக்கு எதிரே பாகிஸ்தான் எல்லைக்குள் 20 மீட்டர் தொலைவில் ட்ரோன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அதை பாகிஸ்தான் வீரா்கள் எடுத்துச் சென்றனர் என்று பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் அதே எல்லையில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியளவில், ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய வயலில் இருந்து 25 கிலோ ஹெராயினை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை வேலியின் இருபுறமும் இந்த நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டதைடுத்து இந்திய துருப்புக்கள் உஷார்படுத்தப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSF shoots down Pakistan drone in Punjab Border


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->