ஆஸ்திரேலியாவில் விசா பெற திருமணம் செய்து கொண்ட சகோதர- சகோதரி.! தீவிர தேடலில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது சகோதரியை திருமணம் செய்து கொண்டார். ஏனென்றால், சகோதரருக்கு ஆஸ்திரேலிய விசா உள்ளது. அங்கு தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால், மற்றவருக்கு விசா கிடைப்பது மிகவும் எளிது. 

இதை வைத்து அவர்கள் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்து, அருகிலுள்ள பதிவு அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்தனர். அதன் பின்னர், அவர் தனது கணவருடன் ஆஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பம் அளித்தார். அதன் படி, அவர் விசா பெற்று கணவருடன் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றுள்ளனர். 

இதற்கிடையே அவர்கள் இருவரும் இரண்டு நாட்டு சட்ட அமைப்புகளையும் ஏமாற்றியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, "அவர்கள் இருக்கும் இடம் குறித்த சரியான விவரம் தெரியாததால், நடவடிக்கை எடுப்பதில் தடைகள் உள்ளது. அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தவுடன் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்த வழக்கை விசாரணை செய்து வரும் தலைமை காவலர் ஜெய் சிங் தெரிவித்ததாவது:- "சகோதரன் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வந்தார். சகோதரியும் ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக இருவரும் முதலில் ஒரு குருத்வாராவிடமிருந்து திருமணச் சான்றிதழைப் பெற்று, துணைப் பதிவாளரிடம் பதிவு செய்ததாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. 

அதன் பின்னர், சகோதரி போலி ஆவணங்களை தயாரித்து விசா பெற்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். குடியேற்ற ஊழலில் சகோதரர், சகோதரி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஈடுபட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brother and sister get marriage for Australia country visa


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->