புதுச்சேரியில் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாட்டம்..!
Breastfeeding Week celebrate In puthucherry
புதுச்சேரியில் தாய்ப்பால் வாரவிழா கடந்த 1 தேதி முதல் 7 தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் தாய்ப்பால் வாரவிழா அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா கடந்த 1 தேதி முதல் வருகின்ற 7 தேதி வரை நடைபெறுகின்றது. இந்நிலையில், புதுச்சேரி சுகாதார துறை செயலாளர் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு செய்தி குறிப்பு ஒன்றை வெளியுட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பில் பின்வருவனவை குறிப்பிடபட்டுள்ளன:
பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் அவசியம் தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகள் வளரும் போது சர்க்கரை நோய் ஒவ்வாமை, வேறு சில நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது எனவே பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் அழகை பாதிக்கும் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது ஆனால் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களின் ரத்த சக்கரை அளவு சீராக பராமறிக்கபடுகிறது. அதுமட்டுமின்றி, மார்பக புற்றுநோய் அபாயமும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ளவும் அறிவுறுத்தபடுகிறது. தாய்மார்கள் கவலையுறுவதால் தாய்ப்பால் சுரப்பு குறைகிறது இதனால், அவர்கள் மகிச்சியுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே முதல் தடுப்பூசி எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Breastfeeding Week celebrate In puthucherry