பக்கத்துவீட்டு பையனை வீட்டிற்கு அழைத்து இளம்பெண் மோசமான காரியம்.! துடிதுடித்து உயிரிழந்த சிறுவன்.!  - Seithipunal
Seithipunal


மும்பை பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணிற்க்கும், அவருடைய பக்கத்து வீட்டுக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கம். இதன் காரணமாக இருவருக்கும் இடையே பகை வளர்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அந்தப் பெண் தன்னுடைய பக்கத்து வீட்டு 4 வயது சிறுவனை வீட்டிற்கு அழைத்துள்ளார். ஒன்றுமறியாத அந்த சிறுவனும் அவரின் பேச்சை கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளான். 

அப்பொழுது அவருடைய உடையால் அந்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், சிறுவனின் பிணத்தை தன்னுடைய வீட்டின் தண்ணீர் தொட்டியில் தூக்கி எறிந்து இருக்கின்றார். 

சிறுவனை காணாமல் தவித்த அவனின் தாய் அந்த பகுதி முழுவதும் தேடி இருக்கின்றனர். பின்னர் சந்தேகப்பட்டு கொலையாளியின் வீட்டிலும் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சிறுவன் தண்ணீர் தொட்டியில் மிதப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து கொலை செய்த அந்தப் பெண்மணி கைது செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் என்றும் பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy killed by neighbour aunt 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->