பச்சிளங்குழந்தையை ஆப்ரேசன் தியேட்டரில் கடித்து குதறிய நாய்.. பிறந்த சில நொடிகளிலே அரங்கேறிய துயரம்..!
born baby bite by dog on operation theatre
உத்திரபிரதேசத்தில் பருகாபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அன்று காஞ்சன் என்னும் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்து சில மணி நேரத்தில் காஞ்சன் தனி அறைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவருக்கு பிறந்த குழந்தை குறித்து மருத்துவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆப்ரேசன் ரூமில் இருந்து நாய் ஓன்று வெளியே வந்ததை பெண்ணின் குடும்பத்தார் பார்த்தார்கள்.
இதன் காரணமாக, குடும்பத்தினர் பதறியடித்து கொண்டு அறைக்குள் சென்று பார்த்ததில் குழந்தையின் உடல் முழுவதும் இரத்த காயங்களுடன் இறந்த நிலையில் தரையில் கிடந்துள்ளது. அவர்களது குழந்தையை நாய் கடித்து கொன்றுவிட்டதாக உறவினர்கள் காவல் நிலையதில் மருத்துவமனை மீது புகார் அளித்தார்கள்.
இதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட அந்த தனியார் மருத்துவமனை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
born baby bite by dog on operation theatre