அசாம்.! ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


அசாமில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் அசாமின் திப்ரூகார் நகர் ரோமோரியா பகுதியில் பிரம்மபுத்திரா நதியில் 9 பேருடன் படகு ஒன்று சென்றநிலையில், ஆற்றின் வேகத்தினால் நீரில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் பயணித்த 9 பேரில் 4 பேர் மட்டும் நீந்தி கரை வந்து சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 5 பேர் மாயமானதையடுத்து, இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண படை வீரர்கள், அந்த பகுதிக்கு சென்று காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boat capsized in assam


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->