ராஜபக்சேவை சந்தித்த பாஜகவின் முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


ராஜபக்சே வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகேந்திரா ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி விழாவுக்கு சுப்பிரமணியசாமி சென்றுள்ளார். பின்னர் அதிபர் கோத்தபையவையும் சந்தித்து பேசியுள்ளார். இலங்கையில் நிகழும் அரசியல் நிலவரம்  மற்றும் கள நிலவரம் பற்றி பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனையும் சந்தித்து பேசி உள்ளார்.  ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களையும் சுப்பிரமணிய சுவாமி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது ராஜபக்ச குடும்பத்தின் நண்பரான சுப்பிரமணியசாமி இதற்கு முன்னர் அவர்களை அடிக்கடி சந்தித்து பேசி உள்ளார். 

பாதுகாப்புத் துறை சம்பந்தமான பல்கலைக்கழகத்திலும் அவர் உரையாற்றியுள்ளார். அதில் ராஜபக்சேவை சுப்பிரமசுவாமி புகழ்ந்து பேசியது மட்டும் இல்லாமல் விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை ஒழித்துள்ளனர் என கூறியுள்ளார்.

தற்பொழுது இந்தியாவில் நிலவு வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சுப்பிரமணியசாமியின் இலங்கை பயணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJPs main leader meeting with Rajapakse


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->