கட்சியில் சேர்ந்த உடனே அண்ணாமலை செய்த காரியம்.! பாய்ந்த வழக்கு.!
bjp annamalai got case by kovai police
ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து நேற்று கோவையில் இருக்கும் பாஜக அலுவலகத்திற்கு அண்ணாமலை வருகை தந்தார். அப்பொழுது, அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் மிகவும் தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், அதில் பங்கேற்றவர்கள் ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக அண்ணாமலை மற்றும் பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில துணை தலைவர் கனகசபாபதி ஆகியோர் மீது காவல்துரையினர் 143, 341, 269, 285 IPC r/w 3 of Epdamic Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
bjp annamalai got case by kovai police