BigBreaking || கிருஸ்துவ கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில்., பிஷப் பிரான்கோ விடுதலை.!
Bishop Franco acquits nun of sexual assault
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து பிஷப் பிரான்கோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, கேரள மாநில கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, பிஷப் ஃப்ரான்கோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பிஷப் ஃப்ரான்கோ மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று பிஷப் பிரான்கோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விவரம் : கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முல்லக்கல்லை கேரளா காவல்துறை கைது செய்துள்ளது
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், 2016 வரை பேராயர் ஃபிரான்கோ பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கன்னியாஸ்திரி ஒருவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட கேரள போலீசார் விசாரணையை மேற்கொண்டு இருக்கும்போதே, புகார் அளித்த கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை அவர் சம்மந்தப்பட்ட திருச்சபை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுசம்மந்தமான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்த நிலையில், இன்று இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
English Summary
Bishop Franco acquits nun of sexual assault