பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணையை தொடங்கிய காவல் துறை.. விரைவில் கைதாகும் எம்.பி?..! - Seithipunal
Seithipunal


பீகார் எம்.பி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் தொகுதி எம்.பி பிரின்ஸ் ராஜ் பஸ்வான். இவர் லோக் ஜனசக்தி கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். பிரின்ஸ் ராஜ் பஸ்வான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பெண்ணொருவர் குற்றஞ்சாட்டி இருந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி கடந்த மே மாதத்தில் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த குற்றச்சாட்டினை மறுத்த பிரின்ஸ், தன்னிடம் பெண்மணி பணம் பெறும் நோக்கத்துடன் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், பெண்மணி நான் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டெல்லி காவல் துறையினர் விசாரணை செய்ய உத்தரவு பிரித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ராஜ் பஸ்வான் மீது டெல்லி ஹன்னாட்டி பிளேஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில், எம்.பி கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன என தகவல் தெரியவருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar MP Prince Raj Paswan Against Complaint Registered by Police about sexual Abuse Issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->