குவாரன்டைன் முடிந்ததும் கையோடு காண்டம் விநியோகம்..!! கண்ணீரில் சிங்கில்ஸ்..!!
Bihar govt distribute condom after complete quarantine return home
கரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு அமலான நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் ஊருக்கு திரும்பி வரும் நிலையில், 14 நாட்கள் முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனர்.
சுமார் 14 நாட்கள் கடந்து 8 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்த்து சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் இன்னும் தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் இவ்வாறாக தங்களின் இல்லத்திற்கு திரும்பி வரும் நிலையில், அரசு கர்ப்பங்களை தடுக்க ஆலோசனை வழங்கி வருகிறது.
இதற்காக குடும்ப கட்டுப்பாடு மற்றும் சுகாதாரத்துறை சார்பாக ஆணுறைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஊரடங்கு காலத்தில் அதிகரிக்கும் கர்ப்பங்களை குறைக்க புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் ஆணுறைகள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Bihar govt distribute condom after complete quarantine return home