பரபரப்பான நேரத்தில் ஆர்ஜேடி கட்சியின் டுவிட்! கட்சியினருக்கு அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


பீகாரில் 243 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, தொடங்கியது முதல் பா.ஜனதா கூட்டணி - மகா கூட்டணிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. 

எண்ணிக்கையின் ஆரம்ப நேரத்தில் மகா கூட்டணி முன்னிலை பெற்றிருந்தது. போக போக தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற ஆரம்பித்தது. மாலை 5 மணி நிலவரப்படி 50 சதவீத வாக்குகள்தான் எண்ணப்பட்டுள்ளன. 

243 தொகுதிகளில் தற்போது 10 தொகுதிகளுக்கு முடிவு வெளியாகியுள்ளது. பாஜக 4 தொகுதிகளிலும்  ஆர்ஜேடி, ஜேடியூ தலா இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் விகாஷான் இன்ஸான் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 

இந்த நிலையில் நாம்தான் வெற்றி பெறும்வோம் என மகா கூட்டணியின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி, அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. " அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுடன் தொடர்பில் உள்ளோம், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட தகவல்கள் நமக்கு ஆதரவாக உள்ளன. இரவு எவ்வளவு தாமதமாக ஆனாலும், வேட்பாளர்களும் வாக்கு எண்ணும் முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்க வேண்டும் என கூறியதுடன்,  மெகா கூட்டணி  அரசாங்கம் நிச்சயம் அமையும்" என தெரிவித்துள்ளார்கள். 

தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 123 இடங்களும், மெகா கூட்டணி 111 இடங்களிலும், மற்றவர்கள் 9 இடங்களிலும் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar Election results RJD Tweet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->