மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது! நிதீஷ்குமார் அறிவிப்பு.!
Bihar CM Nitishkumar
மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளதாக வந்த தகவலை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மறுத்து உள்ளார்.
பீஹார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார், மாநிலங்களவை உறுபினராக பதவி ஏற்க உள்ளார் என்றும், அதன் பின்னர் விரைவில் நடக்கவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்றும் சமீபத்தில் தகவல் பரவியது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த, அவர், மாநிலங்களவை உறினராக பதவி ஏற்க உள்ளதாகவ வந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும், அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்தார். இது போன்ற வதந்திகள் பரவுவது ஏன் என தெரியவில்லை என்றுன் அவர் தெரிவித்தார்.