மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கும் வங்கி பணியாளர்கள்.. தேதி குறிப்பு..!!
bank strike date announced
வங்கிகளில் பணியாற்றி வரும் நபர்கள் தங்களின் சம்பளத்தை உயர்த்த கூறி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். சுமார் 9 வர்த்தக யூனியனின் பிரதிநிதித்துவ அமைப்பாக வங்கிகள், தொழிற்சங்க ஐக்கிய மன்ற சம்பள உயர்வு தொடர்பாக இந்திய வங்கி சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த 13 ஆம் தேதியன்று சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், வங்கி தொழிற்சங்கத்தின் சார்பாக ஐக்கிய மன்ற வங்கிகள் தங்களின் பணியாளர்களுக்கு 15 விழுக்காடு சம்பள உயர்வை கோரியிருந்தது.
இருப்பினும் சம்பள உயர்வு 12.25 விழுக்காடு உயர்த்தப்பட்ட வாய்ப்புள்ளதாக இந்திய வங்கிகள் சங்கம் உறுதியாக தெரிவித்ததால், ஊதிய உயர்வு தொடர்புடைய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது.
இதனைத்தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதியில் 31 ஆம் தேதி முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி தொழிற்சங்க ஐக்கிய மன்றம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக எங்களின் கோரிக்கையை ஏற்று ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், எங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனால் இந்த மாதத்தின் இறுதியில் இரண்டு நாட்கள் இந்திய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்று மார்ச் மாதத்தின் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு முடிவு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
bank strike date announced