அடுத்த குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம்.!! கைதான பயங்கரவாதியின் பகீர் வாக்குமூலம்..!!
bangalore bomb blast planned by terrorist police arrest and investigation going on
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் சிலர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசிய தகவலானது கிடைத்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள்., பெங்களூரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த தேடுதல் வேட்டையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் இராம்நகர் பகுதியில் பதுங்கியிருப்பதாக கைது செய்ததை அடுத்து., கைது செய்த பயங்கரவாதியிடம் மேற்கொண்ட விசாரணையில் அங்குள்ள தொரட்டப்பல்லாபுராவில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதியான ரஷிபுல் ரகுமான் என்ற பயங்கரவாதியை கைது செய்தனர்.
இதற்குப்பின் கைதான பயங்கரவாதியிடம் மேற்கொண்ட விசாரணையில்., குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ரஷிபுல் ரகுமான் ஈடுபட்டு வந்ததும்., இந்த பயங்கரவாதிக்கு உதவியாக மேலும் சிலர் இருந்ததும் தெரியவந்தது. ரகுமானுக்கு உதவியாக இருந்த நசீர்ஷேக் என்பவரின் உதவியுடன்., அங்குள்ள சிக்கப்பாவாரா நகரில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அடுத்த பயங்கரவாதியான நசீர் ஷேக்கை தேடி வந்த நிலையில்., நஷீர் ஷேக் திரிபுரா மாநிலத்தில் அகர்தலா பகுதியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நசீர் ஷேக்கை கைது செய்துள்ளனர். பின்னர் பயங்கரவாதியை பெங்களூருக்கு அழைத்து வந்த காவல் துறையினர் அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
tamil online news : Tamil online news Today News in Tamil
English Summary
bangalore bomb blast planned by terrorist police arrest and investigation going on