புதரில் இருந்து முனகல் சத்தம்.. எட்டிப்பார்த்த பெண்ணுக்கு.. காத்திருந்த அதிர்ச்சி.!
baby trying to kill by someone
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணவரம் கிராமத்தில் குழந்தை ஒன்றின் முனகல் சத்தம் புதரிலிருந்து கேட்டுள்ளது. அந்த குழந்தையின் அழுகுரலைக் கேட்ட ஒரு பெண் கிராம வாசிகளை அழைத்து கொண்டு சென்று பார்த்த பொழுது ஒரு குழியில் குழந்தை இருந்ததை கண்டறிந்து மீட்டனர்.
பின்னர், குழந்தையை கழுவி அதன் வாயிலிருந்து மண்ணை அகற்றினர். உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை கொண்டு சேர்த்தனர். தற்போது மருத்துவமனை பராமரிப்பில் குழந்தை இருந்து வருகிறது.
இது குறித்து கிராம மக்கள், "யாரோ குழந்தையை உயிருடன் புதைத்து கொலை செய்ய முயற்சித்து இருக்கின்றனர். அவசர அவசரமாக அவர்கள் அடக்கம் செய்ய முயன்றதால் பாதி அடக்கம் செய்த நிலையில் விட்டுச் சென்றுள்ளனர்.
இன்னும் சற்று நேரம் குழந்தை அங்கு குழந்தை இருந்தால், உயிரிழந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
baby trying to kill by someone