குழந்தை தலையில் ஏடாகூடமாக சிக்கிய பாத்திரம்... விளையாட்டில் ஏற்பட்ட விபரீதம்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் பிரவம் என்ற ஊரைச் சேர்ந்த தம்பதிகள் ஆபிரஹாம் - விஜி. இவர்கள் இருவருக்கும் பியான் என்னும் மூன்று வயது மகன் இருக்கிறார்.  

வீட்டு  வாசலில்  தவழ்ந்து விளையாடி கொண்டிருந்த 3 வயது பியான் அருகில் ஈயப்பானை ஒன்று இருந்துள்ளது. அந்த பாத்திரத்தை வைத்து கொண்டு விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென்று  பாத்திரத்தை எடுத்து பியான்  தலையில் கவிழ்த்துக் கொண்டான். 

இதை தொடர்ந்து, அதை எடுக்க முயன்ற போது எடுக்க வராத காரணத்தால் அலறிய துடித்த குழந்தை அழுதுள்ளது. குழந்தையின் அழுகை சத்தத்தைக்  கேட்டு  ஓடிவந்து பார்த்த தாய் விஜி, பியான்  தலையில் மாட்டிருந்த பானையை எடுக்க முயற்சி செய்தார்.

அனால் அவரால் அதை எடுக்க முடியவில்லை, அக்கம் பக்கத்தினரும் அவருக்கு உதவி செய்துள்ளனர். ஆனாலும் பானையை எடுக்க முடியாததால் பெற்றோர் பதறிப்போனார்கள்.

இதை தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த ஜோஜின் என்பவர், பியானை தீயணைப்புத் துறைக்கு போன் செய்து தகவல் அளித்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள்  கத்திரியால்  பானையை வெட்டி குழந்தையை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby head stock with pot


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->