பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டாகி கையோடு வந்த துயரம்..!
baby head cut during delivery
தெலுங்கானா மாநிலத்தின், நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாவித்ரி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பவர், இந்த நிலையில் தான் இவரை அச்சம் பேட்டை மண்டல அரசு மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஒருவர் குழந்தையை வெளியில் எடுக்கும் முயற்சியில், தலை துண்டாகி உடல் மட்டும் பெண்ணின் வயிற்றுக்குள் மாட்டிக்கொண்டது.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மருத்துவர், உண்மையை வெளியில் சொல்லாமலே மறைத்திருக்கிறார்கள், பின்னர் தாயின் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் இருக்கிறது என்று கூறி ஹைதராபாத் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரைத்தார். அதன்படி சாவித்ரியை அவரது உறவினர்கள் ஹைதராபாத் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். இந்த நிலையில் அங்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், சிசுவின் உடல் மட்டுமே தாயின் கர்ப்பப்பையில் இருக்கிறது.
தலை துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக கடும் ஆத்திரமடைந்த சாவித்ரி உறவினர்கள் அச்சம் பேட்டை மண்டல அரசு மருத்துவமனைக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதுடன், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
baby head cut during delivery