தாயின் கைகளிலேயே பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை.! வெளியான நெஞ்சை உறையவைக்கும் அதிர்ச்சி காரணம்!! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் ஷாஜகான்போரில் குழந்தை ஒன்று கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில் அதன் பெற்றோர்கள், குழந்தையை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது. சிறப்பு சிகிச்சை கொடுக்க வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என  பரிந்துரைத்துள்ளனர்.

இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவி செய்துதருமாறு கேட்டுள்ளனர். ஆனால்மருத்துவமனை வளாகத்தில் 3 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆம்புலன்ஸ் தற்போது இல்லை எனக்கூறி மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளது.

இதனை தொடர்ந்து பணம் இல்லாத நிலையில் பெற்றோர்கள், குழந்தையை கையில் சுமந்தபடியே  நடந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் பாதி வழியிலேயே குழந்தை 
 தாயின் கைகளிலேயே உயிரிழந்ததாக குழந்தையின் தாய் மற்றும் தந்தை இருவரும் கதறியபடி தெரிவித்துள்ளனர் .

                     

இந்த  நிலையில் அவர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் குழந்தையை பெற்றோர்கள் எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். இந்நிலையில் அவருக்கு கடுமையான காய்ச்சல் உள்ளது. எனவே உயர் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என ஆலோசனை வழங்கினோம்.

ஆனால் அவர்கள் எங்க குழந்தையை எங்கு செல்லவேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று ஏளனமாக கூறி விட்டு அவர்கள் சென்று விட்டனர் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby dead in mothers hand


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->