அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.! வெளியான முக்கிய அறிவிப்பு.!
AYODYA IN HIGH PROTECTION MODE
பாபர் மசூதி இடிப்பு சம்பவ நினைவு தினத்தை முன்னிட்டு, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இந்த தினத்தில் ஆண்டுதோறும் பாபர் மசூதி இடிப்பு தினமாக எண்ணி முஸ்லிம் அமைப்புகள் அனுசரிக்கப்படுகின்றது.
அதன்படி நாளை அயோத்தியில் அந்த தினம் அனுசரிக்கப்பட ஏற்பாடுகள் தீவிரமாகி இருக்கின்றது. இதன் காரணமாக அசம்பாவிதம், கலவரங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றது.
மேலும், அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மாவட்டம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பதற்றமானவை என கண்டறியப்பட்ட 269 இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
AYODYA IN HIGH PROTECTION MODE