கேரளா.! 10 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் 10 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் உப்பலா பகுதியை சேர்ந்தவர் லத்தீப். இவர் தனது குடும்பத்தினருடன் பத்வாடிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது காசர்கோட் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மலைப் பகுதியிலிருந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auto overturns in ten foot ditch in Kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->