புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுத்து வாங்கப்போகும் மழை.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


வாங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு ஒன்று உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடலோர மாநிலங்கள் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு அடுத்த 5 நாட்களுக்கு  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மன்னார்வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aug 03 weather report in india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->