மதம் மாற மறுத்ததால் பாதிரியார் வெறி செயல்,15 வயது சிறுவன் பலி..! - Seithipunal
Seithipunal


கிறிஸ்துவ மதத்திற்கு மாறவில்லை என கூறி விடுதி வார்டானால் 15 வயது மாணவர் ஒருவர், சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் திரிபுரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலதில், விடுதி கண்காணிப்பாளரால் கொடூரமாக தாக்கப்பட்டதால் மாணவர் உயிரிழந்திருக்கிறார். தற்போது விடுதி வார்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவனின் தாய் கொடுத்த புகாரில் கிறிஸ்தவ பள்ளியின் பாதிரியாரையும், ஹாஸ்டல் வார்டானையும் போலீசார் கைது செய்துள்ளனர்.விடுதி வார்டன், ஏழை மாணவர்களை மூளை சலவை செய்து மதமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

சம்பவத்தன்று மாணவரை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த மாணவனே சிசிடிவி கேமரா இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று தனியாக உட்கார வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் மாணவர் மயங்கி விழுந்திருக்கிறார், இந்த சம்பவம் பள்ளியின் பொறுப்பாளர் பாதிரியாருக்கு தெரிந்துதான் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு மாணவரை அழைத்து சென்ற பள்ளியின் பொறுப்பாளர் பாதிரியார் இது குறித்து வெளியே சொல்லக் கூடாது என்ற பிற மாணவர்களை மிரட்டி இருக்கிறார்.

மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது சுவாச அமைப்பு இதயம் மற்றும் நுரையீரலில் கடுமையான உள் காயத்தையும், அதனால் ஏற்பட்ட சோகத்தையும் அறிந்தார்கள்.

அப்போது அந்த மாணவன் அவனுக்கு ஏற்பட்ட கொடுமையை அனைவரிடமும் கூறினான். மேலும் பள்ளி விடுதிகளில் உள்ள மற்றவர்கள் பாதிரியார்கள் மற்றும் ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்டோர் மதம் மாற வற்புறுத்தி சித்திரவதை செய்வதாக கூறியிருக்கிறார்கள். கடந்த ஆண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு இதே  அழுத்தம்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attack to change the religion 15 years old boy dead


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->