காதல் திருமணம்.. குழந்தைகள்.. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம்.. விபரீத முடிவெடுத்த வாலிபர்.!!
atm theif arrest by police in pondichery
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சுரேன் பகுதியில் இருக்கும் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையத்தில், கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியின் போது திருட்டு நடைபெற்றுள்ளது. குறித்த நபர் ஏ.டி.எம்மில் இருக்கும் பணத்தை திருட முயற்சித்து, திருட இயலாததால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து வங்கியின் பொதுமேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கண்காணிப்பு காமிராவில் கொள்ளையனின் முகம் பதிவாகாமல் இருக்க முகமூடியால் மறைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஊரடங்கு பாதுகாப்பு பணியின் போது வாலிபரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், வாலிபர் முன்னுக்கு பின்னர் முரணாக பதிலைக்கவே, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதிச்சனூர் பகுதியை சார்ந்த சேகர் என்பவரின் மகன் பிரபு (வயது 24) என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர் புதுச்சேரியில் உள்ள ஆம்பூர் சாலையில் ஐஸ் கடையில் பணியாற்றி வந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலயில், ஊரடங்கின் காரணமாக குடும்பம் நடந்த பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏ.டி.எம் மையத்தில் திருட முடிவு செய்து, சம்பவத்தன்று திருட்டு நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர், ஏ.டி.எம் மையத்தை உடைக்க பயன்படுத்தப்பட்ட கத்தி, இரும்பு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இணையத்தின் மூலமாக ஏ.டி.எம் மையத்தை கொள்ளையடிப்பது தொடர்பாக கற்றுக்கொண்டதும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
atm theif arrest by police in pondichery