நிர்வாண நரபலி பூஜை.! குண்டடிபட்ட சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!!
assam narapali man died after medical surgery police investigation going on
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள உடல்குரி மாவட்டத்தில் மூன்று வயதாகும் சிறுமியை நரபலி கொடுக்க முயன்ற சமயத்தில்., அப்பகுதியை சார்ந்த கிராம மக்கள் தடுத்து நிறுத்தி சிறுமியை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியை காப்பாற்ற காவல் துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டின் போது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
கடந்த சனிக்கிழமை இரவன்று அங்குள்ள கணக்கப்பாரா கிராம பகுதியில் ஒரே குடுமத்தை சார்ந்த எட்டு பேர் நிர்வாணமாக நின்று கொண்டு மந்திரங்களை உச்சரித்தவாறு பூஜை மேற்கொண்டனர். இவர்களுக்கு எதிப்புறம் அமர்ந்திருந்த சாமியார் மூன்று வயதாகும் குழந்தையை நரபலி கொடுக்க தயாரானார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியை காப்பாற்ற நினைத்த சமயத்தில்., கைகலப்பாகி அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல் துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டின் போது நரபலி கொடுக்க முயன்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில்., அவனை மீட்ட காவல் துறையினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில்., நரபலி கொடுப்பதற்கு முன்னதாக குடும்பத்தினர் அனைவரும் நிர்வாணமாக நின்று வீட்டை கொளுத்தி விட்டு ஆடியுள்ளார். இந்த நிலையில்., சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகவே., கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக இவர்களின் வீட்டில் இருந்த சிறுமி தற்கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
assam narapali man died after medical surgery police investigation going on