ஊரடங்கை 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம்..!
assam may be 2 weeks curfew extension
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் முதல் கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவடைகிறது. மீண்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக இன்று அல்லது நாளை பிரதமர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாநிலங்கள் மட்டும் மேலும் இரண்டு வருடங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க கோரி மத்திய அரசுக்கு அசாம் மாநில முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கவே அதிக அளவில் வாய்ப்பு உள்ளதா கூறப்படுகிறது.
English Summary
assam may be 2 weeks curfew extension