அசாம் வெள்ளம்.. 55 லட்சம் பேர் பாதிப்பு.. ஆன்மீக தலைவர் தலாய்லாமா ரூ.10 லட்சம் நிதியுதவி.! - Seithipunal
Seithipunal


அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆன்மீக தலைவர் தலாய்லாமா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது

மேலும், முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் 33 மாவட்டங்களில் மொத்தம் 55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

அதன்காரணமாக, பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் மாநிலத்துக்கு நிதியுதவி அளிப்பதாக திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். இது குறித்து, அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு தலாய் லாமா எழுதியுள்ள கடிதத்தில், அசாமில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam flood thalailama 10 lakhs relief Fund


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->