அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு.. 9 பேர் உயிரிழப்பு.. 6.67 லட்சம் பேர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவையும் கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.

பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 மாவட்டங்களில் 6.62 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை இராணுவப் படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய அளவிலான நிலச் சரிவுகள் மற்றும் தேங்கிய வெள்ள நீரால் ரயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam flood affected 6.67 lakhs peoples and 9 death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->