அசாம் வெள்ள பாதிப்பு : 18 லட்சம் பேர் பாதிப்பு.. 54 பேர் உயிரிழப்பு.!
Assam flood 54 Death
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்28 மாவட்டங்களில் 18.94 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்காரணமாக, அத்தியாவசிய தேவைகள் தவிற மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.