அசாமில் பெய்த கனமழையால் வெள்ளம்..3 பேர் பலி..25,000 பேர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொபிலி ஆற்றில் அபாய அளவைக் கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. இந்த ஆண்டில் முதல் முறையாக ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கால், திமஜி, ஹாஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் ஆகிய மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட 94 கிராமத்தை சேர்ந்த 24,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,732.72 ஹெக்டேர் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை கழகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam flood 3 members death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->