அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு.. 14 பேர் பலி.. 7 லட்சம் பேர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிப்படைந்துள்ளனர்.

வட மாநிலமான அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆட்சியிலும் அபாய அளவைக் கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் பல்வேறு கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.

இந்த நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவப் படைகள், பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை மற்றும் அவசரகால சேவைத் துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாலங்கள், ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் சாலைகள் என போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam flood 14 person death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->